திருமணத்திற்காக மத மாற்றத்தை கையாள்வதை தடை செய்வதற்கான வரைவு சட்டத்திற்கு உத்தரபிரதேச அரசு இன்று (நவம்பர் 24) அன்று ஒப்புதல் அளித்தது, இதனை மீறுபவர்களை 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க வழிவகை உண்டு.

சமீபத்திய வாரங்களில், பாஜகவின் ஆளும் உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்  திருமண போர்வையில் இந்து பெண்களை இஸ்லாமிற்கு மாற்ற முயற்சிப்பதை எதிர்கொள்ள சட்டங்களை இயற்றுவதற்கான திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளன. இதை ‘லவ் ஜிஹாத்’ என்று குறிப்பிடுகின்றனர்.

“வஞ்சகமாக பேசி, பொய்கள் கூறி மத மாற்றங்கள் செய்யப்படுவது இழிவான காரியம். இது தொடர்பாக ஒரு சட்டம் இருக்க வேண்டியது அவசியம் என  அமைச்சரவை அமைச்சரும், உத்திரப்பிரதேச அரசாங்க செய்தித் தொடர்பாளருமான சித்தார்த் நாத் சிங் கூறினார்.

புதிய சட்டத்தின் கீழ் தண்டனை ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ. 15,000 வரை அபராதம் இருக்கும். ஆனால் சம்பந்தப்பட்ட பெண் மைனர் அல்லது ஒரு பட்டியல் சாதி அல்லது ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்றால், சிறைத் தண்டனை மூன்று முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும். அபராதம் ரூ. 25,000 வரை கட்ட வேண்டும்.

வெகுஜன மாற்றங்களுக்கு, தண்டனை மூன்று ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையும் அதில் ஈடுபடும் அமைப்புகளுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் ”என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.

திருமணத்திற்குப் பிறகு யாராவது மதத்தை மாற்ற விரும்பினால், மாவட்ட நீதவான் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும், அனுமதி வழங்கப்பட்டவுடன் அந்த நபர் மாற்ற முடியும். இது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தீர்க்கும் என்று அவர் கூறினார்.

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.